அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/4/13

99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ராகதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாவில் எடுக்கும் மகாஜோதிக்கு ராகதீபம் என்று பெயர். எனவே இவர்கள் ஜோதி எடுக்கும் உரிமை பெற்றவர். 
தாளெதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை. ஓலைச்சுவடிகள் சேகரித்து வைத்தவராய் இருக்கலாம்.மந்திரங்கள், ஜாதகங்கள் மற்றும் ஏடுபடுத்தப்பட வேண்டியவற்றை ஓலையில் எழுதித் தந்தவர்களாய் இருக்கலாம். 
குறிப்பு :- சேலம் மாவட்டத்தில் இத்தகைய ஓலைகளைச் சீட்டு என்று கூறுகின்றனர். குழந்தைகளுக்கு சந்து, முடி போன்ற தோஷங்களை நீக்க இன்றும் இத்தகைய சீட்டுக்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கட்டுகின்றனர். இம் மந்திரங்கள் இன்றும் பனை ஓலையில் எழுதித் தரப்படுகின்றன. 
கன்னடத்தில் இத்தகைய ஓலைகள் சந்தினு சீட்டு என்று அழிக்கப்படுகின்றன. 
திதியதவரு :- திதிப்பூசனை செய்பவர். பஞ்ச அங்கங்களுள் திதியும் ஒன்று.

No comments:

Post a Comment