அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/19/13

120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம்

ரிக்வேதத்தில் 9-67; 11-1-30; 37-43; 53-74 வது ரிக்குகளுக்குப் பரத்வாஜர் கர்த்தா. இம்முனிவர் நாள்தோறும்அக்நிஹோத்ரம் செய்வார். 

கங்கையில் இவர் நீராடச் செல்கையில் தம் வீரியத்தைத் துரோண கும்பத்தில் வைத்தார். இத்தேஜஸினால் துரோணர் பிறந்தார். துரோண கும்பத்திலிருந்து பிறந்தமையின் துரோணர் எனப்பட்டார். 

ரிக்வேதத்திலும், சாமவேதத்திலும் பல சூக்தங்களுக்குப் பரத்வாஜர் கர்த்தா. 

மிகவும் வயதானவர். நீண்ட காலம் வாழ்ந்தவர். முந்நூறு ஆண்டுக்காலம் பிரம்மச்சரியத்துடன் வேதங்களை ஓதியவர். அங்கங்கள் நொந்து முதிர்ந்து தளர்ந்து படுக்கையில் இருந்த இவரிடம் வந்த இந்திரன் இன்னும் நூறாண்டு காலம் ஆயுளை உமக்குத் தந்தால் என்ன செய்வீர் ? என்றான். அந்நூறாண்டு ஆயுளிலும் பிரம்மச்சரியத்தை மேற்கொள்வேன். வேதம் ஓதிக் காலம் கழிப்பேன் என்றார் பரத்வாஜர். 

வனவாசம் மேற்கொண்டு இராமபிரான் இவர் ஆசிரமத்திற்குச் சென்றான். மீண்டும் இராவணவதம் முடிந்து அயோத்தியைக்கு மீண்டு வருகையில் இவரது ஆசிரமம் வந்து விருந்து உண்டனன் எம்பிரான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாகுளதவரு :- ஸ்ரீ காகுளம் என்னும் ஊர்க்காரர். 

கங்காளதவரு :- கங்காள ருத்திரனை வழிபடுபவர். 

கமலதவரு :- தாமரை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்பவர். 

குத்தாலதவரு :- குத்தால மகரிஷியை வணங்குபவர் குத்தாலம் என்னும் ஊர்க்காரர். 

கொசனதவரு :- 

சிகாகோலதவரு :- கூந்தலை மிக அழகாக அலங்கரித்துக் கொள்பவர். 

சிலுகதவரு :- கிளி வளர்த்தவர். 

சீலவந்துதவரு :- சீலத்துடன் விளங்குபவர். 

சென்னூறுதவரு :- சென்னூரு என்னும் ஊர்க்காரர். 

நிரஞ்சனதவரு :- மனநிறைவுடன் செல்வத்துடன் வாழ்பவர். 

நீகூரிதவரு :- நீகூரி என்னும் ஊர்க்காரர். 

பகடலதவரு :- பவள நகை அணிபவர். பவள வணிகர். 

பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமானவர். 

பட்டதவரு :- அரசனிடம் பட்டயங்கள் பெற்றவர். 

பயிடிதவரு, பைடிதவரு :- பசுக்களை வளர்த்தவர். 

பாபகதவரு :- நேர் வகிடு எடுத்துக் கூந்தலை முடித்துக் கொள்பவர். 

மத்திகூடிதவரு :- மத்திகூடி என்னும் ஊர்க்காரர். 

மராபத்திரைதவரு :- மராபத்தினி என்னும் ஊர்க்காரர். 

முங்குரதவரு :- மூக்குத்தி அணிபவர். 

முத்யதவரு :- முத்துநகை அணிபவர். முத்து வணிகர். 

மதுரதவரு :- மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கட்கதவரு :- அம்மனின் 32 விருதுகளில் கத்தியும் ஒன்று. கத்தியை வழிபாடு செய்து வணங்குபவர். 

முத்கரதவரு :- காயத்ரி மஹாமந்திரத்தின் 24 முத்திரைகளில் முத்கரம் ஒன்று. இம் முத்கா முத்திரையை உடம்பில் தரித்தவர்.

No comments:

Post a Comment