அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/25/13

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு

  

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு 


நண்பர்களுக்கு வணக்கம், புரட்டாசியில் மட்டும் ஏன் பெருமாளுக்கு சிறப்பு. பூமி சூரியனின் சுற்று பாதையில் சூரியனின் வீரியத்தில் இருந்து மறைகிற காலம். புரட்டாசியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தை மாதம் மகர ராசியில் சஞ்சரிகிறவரை 4 மாதங்கள் பூமி சூரியனின் தென் கோட்டு பகுதியில் பயணிக்கிற காலம். தென் மேற்கு பருவ மழை முடிஞ்சு ஆடி காற்றை கடந்து அடை மழை பருவ காலத்தில் பூமி நுழைகிற மாதம் புரட்டாசி .அக்காலத்தில் மக்கள் ஆடியில் விதைத்து விட்டு மழைக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிற பருவமும் கூட.
இந்த பிரபஞ்ச பருவ நிலை மாற்றம் பூமியில் மனித உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.பூமியின் ஜீவராசிகளின் இனபெருக்கத்திற்கான காலம்.மந்த மாருதம் என்று சொல்லுகிற ஊத காற்று வீசுகிற காலம்.
சரி இதற்கும் பெருமாள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம். இதற்க்கு முன் ஒரு கேள்வி. ஏன் மற்ற தெய்வங்களை புரட்டாசிற்க்கு சொல்ல வில்லை? குறிப்பாக சிவ வழிபாட்டை ஏன் கூறவில்லை? ஏன் பெருமாளை மட்டும்
வழிபட சொன்னார்கள்.ஏனென்றால் ஈஸ்வர சக்தி குருதன்மை முக்தி,சந்நியாசி குணம்.பெருமாள் சுக்கிர தன்மை கல்யாண குணம் சம்சாரம்.களத்திரம்.இந்த இரண்டு கோவிலுக்கும் செல்கிறவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டை உணர்ந்து இருப்பார்கள்.ஈஸ்வர கோவிலில் ஒரு அமைதியையும் பெருமாள் கோவிலில் ஒரு உற்சாக உணர்வையும் உணர்ந்து இருப்பார்கள்.
இந்த இனபெருக்க பருவத்தில் பெருமாள்கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன் படுத்துகிற பச்சை கற்பூரம்,சந்தனம்,சம்பங்கி பூ,துளசி தீர்த்தம்.போன்றவை உதவும்.இது நம்முள் சுக்கிர தன்மையை தூண்டியும் சமன்படுத்தவும்(neutralizer ) செய்யும். மனதும் தெய்வீக தன்மையோடு இருக்கும்.இந்த பருவத்தில் உருவாகிற வாரிசுகள் நிலைதன்மைஉடனும்,புத்தி சாலிகளாகவும், தெய்வ பக்தி உடையவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் உடம்பில் அசுர தன்மையை தூண்ட கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் சம்சார வாழ்வில் ஈடுபட்டு நல் வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் புரடசியில் பெருமாள் வழிபாடு.
மேலும் அடைமழை காலம் தொடங்குவதால் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகிற தொற்று நோய் கிருமிகள் உருவாகி நம் உடம்பை தாக்கும்.(சளி காய்ச்சல் போன்றவை ) இதிலிருந்து காக்கவும் பெருமாள் கோவில் பச்சை கற்பூரமும் துளசியும், நாம் இருக்கிற விரதமும் மனதையும் உடம்பையும் தகுடு போல வைக்க உதவும். ஐயப்பன் விரதம் இருப்பவர்களுக்கு தெரியும் 48 நாள் விரதம் உடம்பை எந்த அளவுக்கு சீராக்கும் என்று.அடை மழை காலம் என்பதால் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் ஆதலால் எளிதில் ஜீரணமாககூடிய சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சிறிது நேரம் தங்கி இருந்து அச்சக்தியை புரடசியில் பெற்று வாருங்கள்.வயதில் இருப்பவர்கள் நல்ல வாரிசுகளை பெறுங்கள் வயது கடந்தவர்கள் நல்ல தேக ஆரோகியத்தை பெறுங்கள்.

No comments:

Post a Comment