ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை
பொருளாட்சி செய்யும் பொள்ளாச்சி மாநகர் தனில் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருகோவிலில் 72ம் ஆண்டு நவராத்திரி கலை விழா மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு சேவை மற்றும் அம்மன் சிம்மவாகனத்தில் வீதி உலா 14-10-2013 திங்கட்கிழமை மாலை நடைபெறும்.
தினமும் மாலை 5.30- 7.30 மணி வரை ஹோமங்களும் கலைநிகழ்ச்சி களும் நடைபெறும் . 7.30-8.00 மணி வரை குலம் காக்க கொலுவிருக்கும் அம்பிகைக்கு சிறப்பு நவராத்திரி கொலு மஹா பூஜை நடைபெறும்.
அனைவரும் வருக பொள்ளாச்சி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் அருள் பெருக!!
தேவாங்க ப்ளாக் மூலமாக அனைவருக்கும் விழா அழைபிதழ் அனுப்பிய செல்வி சுஷ்மிதா சந்திரசேகர், பொள்ளாச்சி அவர்களுக்கு நன்றி...
No comments:
Post a Comment