அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/29/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் திருவிழா அழைப்பிதழ்

ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை 

            பொருளாட்சி செய்யும் பொள்ளாச்சி மாநகர் தனில் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருகோவிலில் 72ம் ஆண்டு நவராத்திரி கலை விழா  மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு சேவை மற்றும் அம்மன்  சிம்மவாகனத்தில் வீதி உலா 14-10-2013 திங்கட்கிழமை மாலை நடைபெறும். 

தினமும் மாலை 5.30- 7.30 மணி வரை ஹோமங்களும் கலைநிகழ்ச்சி களும் நடைபெறும் . 7.30-8.00 மணி வரை குலம் காக்க கொலுவிருக்கும் அம்பிகைக்கு சிறப்பு நவராத்திரி கொலு மஹா பூஜை நடைபெறும்.

அனைவரும் வருக பொள்ளாச்சி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் அருள் பெருக!!










தேவாங்க ப்ளாக் மூலமாக அனைவருக்கும் விழா அழைபிதழ் அனுப்பிய செல்வி சுஷ்மிதா சந்திரசேகர், பொள்ளாச்சி  அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment