அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/5/13

137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம்

புலஸ்திய பிரம்ம மகரிஷியைச் சில இடங்களில் குலஸ்திய பிரம்ம ரிஷி என எழுதி உள்ளனர். 

புலம் என்றால் தவம். வேதங்கள் புலம் என்ற சொல்லால் தவத்தைக் குறிப்பிடுகின்றன. தவத்தால் புகழ் பெற்றவர் இம்மகரிஷி. இவர் பிரம்மாவின் புத்திரர். இவர் திருணபிந்துவின் தவச்சாலையில் தவம் செய்யுங்கால், அரம்பையர் நீரில் விளையாட அத்தவச்சாலைக்கு வந்தனர். அவர்களால் தவத்திற்குத் தொல்லைகள் வருதல் கண்டு, இனி என் கண்ணெதிரில் வரும் பெண்கள் கர்ப்பிணிகள் ஆவர் எனச் சபித்தார். 

இதனை அறியாத திருணபிந்துவின் மகள் நீர் விளையாட புலஸ்தியர் முன்வர கர்ப்பமுற்றாள். இதனை உணர்ந்த திருணபிந்து மகளைப் புலஸ்தியருக்கு மணமுடித்துத் தந்தார். 

கார்த்தவீரியார்ச்சுனன் ஒருமுறை போரில் தன்னிடம் தோற்ற இராவணனைச் சிறைப்படுத்தினான். புலஸ்தியர் கார்த்த வீரியார்ச்சுனனுக்கு இராவணஜித் என்னும் பட்டம் தந்து இராவணனைச் சிறை மீட்டார். 

பராசரமகரிஷி அரக்கரை அழிக்க யாகம் செய்கையில் புலஸ்தியர் அந்த யாகத்தைப் பாதியில் நிறுத்தினார். அரக்கரைப் பராசரரின் கோபத்திலிருந்து காப்பாற்றினார். 

தன் தாயான சரஸ்வதி தேவியைப் புலஸ்தியர் நதியாகப் பெறுமாறு சபித்தார். இதனால் சினங்கொண்ட சரஸ்வதி அவரை விபீஷணனாகப் பிறக்குமாறு சபித்தாள். விபீஷணன் உயர்ந்த தர்மகுணங்கொண்டு விளங்கியும், அறத்தின் வடிவமாக விளங்கியதற்கும், தத்துவ ஞானம் கொண்டு விளங்கியதற்கும் பூர்வத்தில் அவன் மாமுனிவராய் விளங்கியதே காரணமாகும். புலஸ்தியருடைய மகன் விச்ரவஸ் பிரம்மா எனப்பட்டார். 

சிவபிரானின் தோழர் என்று புகழப்படும் குபேரன் இவ்விச்ரவஸ் பிரம்மாவிற்கு இளிபிளை என்பாளிடமாகப் பிறந்தவன். 

விச்ரவஸ் பிரம்மாவின் இரண்டாம் மனைவி கேகசி என்பாள். இவர்களுக்கு இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன் ஆகியோர் பிறந்தனர் என்பது இராமாயணத்துள் காணப்படும் வரலாறு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கருடாஜலதவரு :- திருப்பதிக்குக் கருடாஜலம் என்பது ஒரு பெயர். இக்கருடாஜலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கலிகொட்டுதவரு :- கலிகொண்டு என்னும் ஊர்க்காரர். 

கண்டதவரு :- அழகான கழுத்துடையவர். 

கும்மள்ளதவரு :- கும்மள்ள என்னும் ஊர்க்காரர். 

கொண்டெம்தவரு :- கொடெம் என்னும் ஊர்க்காரர். 

கொலுகுலுதவரு :- கொலுகுலு என்னும் ஊர்க்காரர். 

கோவூரிதவரு :- கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

சுக்ஞானதவரு :- நல்லஞானம் உள்ளவர். 

சுந்தரதவரு :- உடல் அழகும், குண அழகும் மிக்கவர். 

நாணயதவரு :- நாநயம், நாணயம் மிக்கவர். 

நிம்பிண்டிதவரு :- எலுமிச்சம் பழம் மந்தரித்துத் தந்தவர். 

புண்யதவரு :- புண்ணியச் செயல்கள் அனேகம் செய்தவர். 

ராவூரிதவரு :- ஆந்திராவில் உள்ள ராவூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

ஆசெபுதவரு, சகூலதவரு, சந்துதவரு, சன்னாதவரு, பாசிதவரு, புட்டாதவரு, புல்லாலதவரு, பெண்டுதவரு, மத்தியகோடிதவரு, வுண்டலதவரு, வுப்புதவரு.

No comments:

Post a Comment