அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/21/14

155 .மார்க்கண்டேய மகரிஷி கோத்ரம்

மிருகண்டு மகரிஷிக்கும், மருத்துவதிக்கும் பிறந்தவர் மார்க்கண்டேயர். பிள்ளையில்லாமலிருந்த மிருகண்டு மகரிஷி சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் செய்தார். அவருக்குத் தரிசனம் தந்த இறைவன் அஞ்ஞானமும், நோயும், தீர்க்காயுளும் உள்ள அநேக புதல்வர்கள் வேண்டுமா ? அல்லது ஞானமும், சிறந்த ஒழுக்கமும், பதினாறு வயது ஆயுளும் உள்ள ஒரு புதல்வன் வேண்டுமா ? என வினவ; மிருகண்டு ஞானமும் ஒழுக்கமும் பதினாறு வயது ஆயுளும் உள்ள ஒரு மகன் வேண்டும் என வரம் பெற்றார். 
வரத்தின் பயனாய் உதித்தவர்தான் மார்க்கண்டேயர். மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு ஆனது. அவரை அழைத்துச் செல்ல யமன் வந்தான். மார்க்கண்டேயரின் தவாக்கினியைத் தாண்டி யமனால் அவரை அணுக முடியவில்லை. மார்க்கண்டேயரோ சிவத்தியானத்தினுள் மூழ்கியிருந்தார். உள்ளே செல்ல இயலாத யமன் பாசத்தினை வீசினான். அகோர மூர்த்தமாக எழுந்த சிவபிரான் தன் அன்பனுக்காக யமனை காலால் உதைத்தார். காலன் காலமானான். 
விதியை இறைவன் தன் மதியால் மாற்றினான். மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு ஆண்டுகள் ஆயுளாக இருக்க அருள் பாலித்தார். பின் பூதேவியின் வேண்டுதலால் யமனை உயிர்ப்பித்தார் இறைவன். 
வனவாச காலத்தில் மார்க்கண்டேயர் பாண்டவரைச் சந்தித்தார். தருமபுத்திரனுக்கு அநேக தருமங்கள் உபதேசித்தார். 
ஒரு சர்வ சங்கார பிரளயகாலத்தில் ஆலந்தளிரில் வடபத்ர சாயியாய்! பச்சிளம் பாலகனாய் மிதந்த ஸ்ரீமந்நாராயணமூர்த்தியைத் தரிசித்தார். எம்பெருமானின் திருவாயினுள் நுழைந்து சென்று அவன் திருவயிற்றினுள் அண்டசராசங்களும், சகல ஜீவன்களும், எல்லாதேவர்களும் இருப்பதைக் கண்டார். 
மார்க்கண்டேயர் அநேக பிரளயங்களைக் கண்டவர் என்பதனை இதிகாசங்கள் உணர்த்தும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குர்ரம்தவரு :- குதிரைகளில் பவனி வருபவர். குதிரைச் செல்வம் உடையவர். 
கபட்ளதவரு :- 
பிந்துதவரு :-

No comments:

Post a Comment