அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/1/14

மகாபாரதம் நாவல் வடிவில்

நண்பர்களுக்கு / உறவுகளுக்கு வணக்கம்,

சில நாட்களுக்கு முன் மகாபாரதத்தை எளிய தமிழில் தருவதற்காக முயற்சி செய்து இருந்தோம். சில காரணங்களால் அது முடியாமல் போனது. அதைப்பற்றிய தேடலின்போது திரு.ஜெயமோகன் அவர்களின் ’’வெண்முரசு’’  என்னும் பதிப்பு மிக எளிய தமிழில் நாவல் வடிவில் கிடைப்பதை அறிந்தோம்,
அதை நம் வலைப்பூ மூலம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

’’இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.’’

 ஐநூறு பக்கங்கள் கொண்டது ஒரு நாவல்  அப்படி ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள் தொடரும்.

இந்த நாவலை அறிமுகப்படுத்திய திரு.அருள் செல்வா சென்னை அவர்களுக்கு நன்றி.

எப்போதும் போல் இந்த முயற்சிக்கும் நண்பர்கள் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.

என்றும் நட்புடன்,

வெ.ரா. பூபாலன்




No comments:

Post a Comment