அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/20/14

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

மஞ்சள் நிற பட்டு உடுத்தி மங்களமாய்
கொலுவிருக்கும் அம்பிகையே!
எங்கள் குல நாயகியே சௌடேஸ்வரி தாயே!
மங்களங்கள் எங்கள் வாழ்வில் பெருகிடவே
அருள்புரிவாய்
சிகப்பு நிற பட்டு உடுத்தி சிங்காரமாய்
வீற்றிருக்கும் சிம்ஹவாகினியே!
சிம்மம் அதில் ஏறிவந்து எங்கள்
சிக்கல்களை தீர்த்திடுவாய் !
ஆடி அமாவாசையிலே அவதரித்த தேவி நீ !
ஆஷாடநாயகியானாய்!
தேவாங்க குலத்தினை தோற்றுவித்த
தாய் நீயே !
தேவாங்க குலத்திற்கே அன்னையாக
ஆனாய் !

சக்தியாக உன்னை அழைக்க
சாந்தத்துடன் நீ வருவாய்
சாமுண்டியாய் உன்னை அழைக்க
சங்கடங்களை தீர்த்திடுவாய்
ஜோதியாக உன்னை அழைக்க
நம் மக்கள் வாழ்விநிற்கே ஒளிகொடுப்பாய்!
குண்ட சக்தியாய் உன்னை அழைக்க
கஷ்டங்களை தீர்த்திடுவாய் !
மஞ்சள் நீர் மெரவணையில் ஆனந்தமாய்
நீ இருந்து மக்கள் வாழ்வினிலே
ஆனந்தம் அளித்திடுவாய்
நீ தோற்றுவித்த உன்மக்கள்  உன்தாழ் பணிகின்றோம் !
எப்பொழுதும் எங்களுடன் நீ இருந்து
வழி நடத்தி  காத்திடவேண்டுகின்றோம்!
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே!!

-- கிரி , செம்மணஹள்ளி

No comments:

Post a Comment