அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/4/14

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணி-சஞ்சீவிராயன் பேட்டை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணி



அருள் மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவருளால் சேலம் சஞ்சீவிராயன் பேட்டை செட்டு பகுதியில்  12.12.2010 அன்று பூமி பூஜை செய்து , நமது ஹம்பி ஹேம கூட காயத்ரி பீடாதிபதி  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மஹா சுவாமிகள் பரி பூரண ஆசிர்வாதத்துடன் கோவில் திருப்பணி துவங்கப்பட்டது.

புதிய ஆலய விவரம் :-



ராஜகோபுரம் ,விமானகோபுரம்.கர்பக்கிரஹம் ,அர்த்தமண்டபம், மஹாமண்டபம், பரிவார தேவதா மண்டபங்கள் .

 ஆலயம் கட்டுவதற்காக கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஸ்தபதி ஆகியோர்களால்
 2 கோடி ருபாய் மதிப்பீடு செய்யப்பட்டு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. ஆலய திருப்பணி தொய்வின்றி தொடர்ந்து நடந்து முடிந்திட  நம் தேவாங்க குல மக்கள் தங்களால் இயன்ற அளவு பொருள் உதவிகளையும் நன்கொடைகளையும் வழங்கி நமது அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவருளை பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் .

ரூ. 5000/- க்கு மேல் பணமாகவோ, பொருளாகவோ நன்கொடை கொடுக்கும் அன்பர்களின் பெயர்கள் கோவில் கல்வெட்டில் பதியப்படும். 

இப்படிக்கு 


கோவில் நிர்வாகிகள் & செட்டு வீரகுமாரர்கள்குழு -சேலம்-6


                                                                 
                                                                      


இது வரை திருப்பணி  நடந்த மற்றும் நடக்க போகும் பட தொகுப்புகள்:-

   




































                                                                                 

   
                                                                                        



10-02-2014 அன்று கோவிலின் முன் புறம் மணி மண்டபம் கட்ட முகூர்த்த கால் போட ப்பட்டு திருப்பணி  நடை பெற்று கொண்டு இருக்கிறது. தேவாங்க குலமக்களின்  உதவிக்கான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 



No comments:

Post a Comment