அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/24/14

வரம் தருவாய் தாயே...... (முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

என் தாயாக வந்த தாயிற்கு சமர்ப்பனம்...
வரம் தருவாய் தாயே......
என் பாவத்தை போக்குவதற்காக இம்மண்ணில் எனக்காக உருவெடுத்தவளே...
உலகில் உள்ள அனைத்து இன்னல்களையும் எனக்காக தாங்கிக்கொண்டவளே...
பூர்வ ஜென்மத்தில் பாவங்களை செய்து நரகத்தில் தவிக்கும் பொழுது, எமனிடம் மன்றாடி என்னை கருவாக உயிர்பித்தவேளே....
நான் செய்த பாவங்களை ஒவ்வொரு நாளாக சுமந்து கருவறையில் ஒன்பது திங்களில் உருகொடுத்தவளே...
என்பாவத்தினை பாசமாக ஏற்று இந்தபாவியையும் ஈன்றேடுத்தவளே.....
பாசத்தை பாலாக்கி என் பிண்டமெங்கும் பரவச்செய்து பாவத்தை சுத்தம் செய்தவளே....
புதிதாய் உருவம் கொடுத்து என்னை மிளிரச்செய்தவளே...
பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தை உன்னால் கழித்தேன் அம்மா,
ஆனால் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கழிக்க முடியாத பாவத்தை செய்து விட்டேன் தாயே.... உன்னை வருத்தி.
இதை கழிக்க உன்னை நான் சுமக்கவேண்டும் என் மகளாக.
வரம் தருவாய் தாயே......




எழுத்து - திரு ஜெயக்குமார், திருப்பூர் 

No comments:

Post a Comment